இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு பாதையின் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் அதிகபட்சமாக 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மேலும், ஜூன் 15 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்றும், வெப்பநிலை படிப்படியாக குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
12 மணி நேரங்கள் முன்பு
கிராமிய சினிமாவின் முகவரியான பாரதிராஜா காலமானார்
13 மணி நேரங்கள் முன்பு
மார்ட்டின் குடும்ப சொத்து பறிமுதல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
1 நாட்கள் முன்பு
நேருவின் சாதனையை கடந்தார் மோடி; புதிய வரலாறு படைத்த பிரதமர்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்