மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி வைர வியாபாரி மீட்பு; ₹44 கோடி கொடுத்து குடும்பம் விடுவித்தது
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 75 வயதான வைர வியாபாரி, சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ₹44 கோடி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ரமணி, 1980-களில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு பின்னர் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார். சர்வதேச அளவில் வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த அவர், சமீபத்தில் மாலி தலைநகர் பமாக்கோவில் உள்ள தங்கச் சுரங்கம் ஒன்றை வாங்கியிருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் மாலியில் தங்கியிருந்தபோது, உள்ளூர் ஆயுதக் கும்பல் ரமணியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அவரை விடுவிக்க முதலில் ₹100 கோடி பணம் கோரி கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, ரமணியின் குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில், ₹44 கோடி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, அவர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுவிக்கப்பட்ட பிறகும், ரமணி மாலியிலேயே பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானு; வரலாற்றுச் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை
3 மணி நேரங்கள் முன்பு
உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன் அனஹத் சிங்; 'வரலாற்று சாதனை' என பிரதமர் மோடி பாராட்டு
3 மணி நேரங்கள் முன்பு
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில் அருகே மாட்டிறைச்சி கழிவுகள்: நடவடிக்கை கோரி பக்தர்கள் கோரிக்கை
3 மணி நேரங்கள் முன்பு
36 நாள் நீண்ட நீட் போராட்டம் முடிவுக்கு வந்தது; சிஜேபி போராட்டத்தை வாபஸ் பெற்றது
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்