உடனடி செய்தி
செய்திகள் ⚡ உடனடி செய்தி

இன்று ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்: தமிழகத்தில் யார் ஆட்சி? பெரிய திருப்பம் வருமா?

இன்று ஓட்டு எண்ணிக்கை தொடக்கம்: தமிழகத்தில் யார் ஆட்சி? பெரிய திருப்பம் வருமா?
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று (காலை 8:00 மணி) தொடங்குகிறது. இந்த தேர்தலில், தமிழகத்தில் 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள், கேரளாவில் 140 தொகுதிகளில் 883 பேர், புதுச்சேரியில் 30 தொகுதிகளில் 294 பேர், அசாமில் 126 தொகுதிகளில் 722 பேர், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளில் 2,926 பேர் போட்டியிட்டனர். கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. கருத்துக்கணிப்புகள் படி, அசாம் மற்றும் புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி தொடரும் என கூறப்படுகிறது. கேரளாவில் காங்கிரஸ் முன்னிலை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக முன்னிலை என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால், சில கணிப்புகள் அதிமுக அல்லது புதிய கட்சிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறுவதால், முடிவில் மாற்றம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. குறிப்பாக, புதிய கட்சிகள் பெற்ற ஓட்டுகள் யாருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது கணிக்க முடியாததால், தேர்தல் முடிவு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஓட்டு எண்ணிக்கை முதலில் தபால் ஓட்டுகளுடன் தொடங்கி, பின்னர் EVM இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். முன்னணி நிலவரங்களை தேர்தல் கமிஷன் இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் வெளியிட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை ‘கோட்டை’ தக்கவைக்குமா திமுக? கொளத்தூர், சேப்பாக்கம், பெரம்பூரில் கடும் போட்டி
சென்னை ‘கோட்டை’ தக்கவைக்குமா திமுக? கொளத்தூர், சேப்பாக்கம், பெரம்பூரில் கடும் போட்டி
8 மணி நேரங்கள் முன்பு
தேர்தல் முடிவுக்கு முன் அதிரடி நகர்வு: த.வெ.க.வில் இணைக்க ‘வலைவீச்சு’ – பிற கட்சிகளில் பரபரப்பு
தேர்தல் முடிவுக்கு முன் அதிரடி நகர்வு: த.வெ.க.வில் இணைக்க ‘வலைவீச்சு’ – பிற கட்சிகளில் பரபரப்பு
8 மணி நேரங்கள் முன்பு
அந்தமானில் கடலடியில் 2,400 சதுர மீட்டர் தேசியக்கொடி விரித்து கின்னஸ் சாதனை
அந்தமானில் கடலடியில் 2,400 சதுர மீட்டர் தேசியக்கொடி விரித்து கின்னஸ் சாதனை
1 நாட்கள் முன்பு
கோவையில் கீழடிக்கு முந்தைய கால மனித எலும்புக்கூடு மற்றும் கடல் சங்கு கண்டுபிடிப்பு
கோவையில் கீழடிக்கு முந்தைய கால மனித எலும்புக்கூடு மற்றும் கடல் சங்கு கண்டுபிடிப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்