செய்திகள்
⚡ உடனடி செய்தி
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்துவரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த 10 நாட்களில் இது 4வது முறையாக எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.46 மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.2.57 உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.107.77 ஆகவும், டீசல் விலை ரூ.99.55 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 15ம் தேதி முதல் இதுவரை பெட்ரோல் விலை ரூ.4.78 மற்றும் டீசல் விலை ரூ.4.84 வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து ஏற்படும் இந்த விலை உயர்வு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் வர்த்தக துறைக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய நகரங்களின் பெட்ரோல் விலை
டில்லி – ரூ.102.12
கொல்கட்டா – ரூ.113.51
மும்பை – ரூ.111.21
சென்னை – ரூ.107.77
முக்கிய நகரங்களின் டீசல் விலை
டில்லி – ரூ.95.20
கொல்கட்டா – ரூ.99.82
மும்பை – ரூ.97.83
சென்னை – ரூ.99.55
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சர்வதேச சந்தையில் இந்த நிலை நீடித்தால், வருங்காலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரக்கூடும் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
49 நிமிடங்கள் முன்பு
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா
55 நிமிடங்கள் முன்பு
காங்கிரஸ் மீது தி.மு.க. கடும் விமர்சனம் | அரசியல் பரபரப்பு
1 நாட்கள் முன்பு
ஈரான் மீது மீண்டும் தாக்குதலா? அமெரிக்கா அடுத்தகட்ட திட்டம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்