உடனடி செய்தி

நக்சல் பிரச்சினை ஒழிப்பு இறுதிக்கட்டத்தில்: லோக்சபாவில் அமித் ஷா அறிவிப்பு

நக்சல் பிரச்சினை ஒழிப்பு இறுதிக்கட்டத்தில்: லோக்சபாவில் அமித் ஷா அறிவிப்பு
புதுடில்லி: நாட்டில் நீண்டகாலமாக நிலவி வந்த நக்சல் பிரச்சினை தற்போது முழுமையாக ஒழிக்கப்படும் இறுதிக்கட்டத்தில் உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் Amit Shah லோக்சபாவில் அறிவித்துள்ளார். நக்சல் ஆதிக்கத்தை மார்ச் 31க்குள் முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக லோக்சபாவில் நடைபெற்ற விவாதத்தில், எம்.பி.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமித் ஷா, கடந்த 75 ஆண்டுகளில் 60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதிலும், நக்சல் பிரச்சினைக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். இந்த பிரச்சினையால் சுமார் 20,000 இளைஞர்கள் உயிரிழந்ததுடன், 12 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு திடமான நடவடிக்கைகளை எடுத்ததன் விளைவாக, நக்சல் பிரச்சினை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் பகுதி, நக்சல்களின் கடைசி கோட்டையாக கருதப்பட்ட நிலையில், தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. அப்பகுதியில் கல்வி, உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் விரைவாக மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலெல்லாம் பள்ளிகள் மற்றும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து மக்களுக்கும் ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு, அரசு நலத்திட்டங்கள் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 31க்குள் இந்த பிரச்சினையை முற்றிலும் ஒழிக்க இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில், பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், மீதமுள்ள இறுதி நடவடிக்கைகள் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ஜூலை 12 தங்க தேரோட்டம்; தங்க விவரங்கள் வெளியிடப்படாததால் கேள்வி
18 மணி நேரங்கள் முன்பு
கிடங்கு ஆய்வில் பரபரப்பு: ஒப்பந்த நிறுவன ஊழியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ. சரவணன்
கிடங்கு ஆய்வில் பரபரப்பு: ஒப்பந்த நிறுவன ஊழியரின் பதிலால் அதிர்ச்சியடைந்த தவெக எம்.எல்.ஏ. சரவணன்
18 மணி நேரங்கள் முன்பு
பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை; விதிமீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு தடை; விதிமீறினால் கடும் நடவடிக்கை – அமைச்சர் ராஜ்மோகன் எச்சரிக்கை
18 மணி நேரங்கள் முன்பு
'எல் நினோ' தாக்கத்துக்கு மத்திய அரசு முழு தயார்: வறட்சி அபாய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
'எல் நினோ' தாக்கத்துக்கு மத்திய அரசு முழு தயார்: வறட்சி அபாய மாநிலங்களில் தீவிர கண்காணிப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்