உடனடி செய்தி

பணமூட்டை சர்ச்சை: பதவி நீக்கத்துக்கு முன் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

பணமூட்டை சர்ச்சை: பதவி நீக்கத்துக்கு முன் நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா
புதுடில்லி: டில்லியில் உள்ள அரசு பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் சர்ச்சையில் சிக்கிய அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, பதவி நீக்க நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். 57 வயதான யஷ்வந்த் வர்மா, டில்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது அரசு வழங்கிய இல்லத்தில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு மார்ச் 14 அன்று ஏற்பட்ட தீ விபத்தில், அவரது வீட்டில் இருந்து எரிந்த நிலையில் 500 ரூபாய் நோட்டுகள் மூட்டைகளாக மீட்கப்பட்டன. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிந்துரைத்தது. இதற்கிடையில், லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மொத்தம் 208 எம்.பி.க்கள், அவரை பதவி நீக்கம் செய்ய கோரி நோட்டீஸ் தாக்கல் செய்தனர். லோக்சபாவில் தீர்மானம் ஏற்கப்பட்டதை தொடர்ந்து, விசாரணைக்காக சபாநாயகர் ஓம் பிர்லா மூன்று பேர் குழுவை அமைத்தார். இந்த நடவடிக்கைகளை எதிர்த்து யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் விசாரணை இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், “மிகுந்த வேதனையுடன் இந்த பதவியை ராஜினாமா செய்கிறேன். நீதிபதியாக பணியாற்றியது பெருமை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். நீதித்துறை வட்டாரங்கள் கூறுவதாவது, பார்லிமென்ட் மூலம் பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்ததால், அதற்கு முன் அவர் ராஜினாமா செய்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
4 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
4 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
4 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்