சென்னை:
விஜய் அரசியல் நுழைவு, திமுக அரசின் வாக்குறுதி நிறைவேற்றம், ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து தினமலர் மற்றும் சாணக்யா இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் 4,500 பேரிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், போலி மற்றும் தகவல் குறைபாடுகள் நீக்கப்பட்டு 3,821 பேரின் கருத்துகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் 234 சட்டசபை தொகுதிகளிலும் தற்போதைய மக்களின் அரசியல் மனநிலை மதிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பில்,
-
திமுக அரசு வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதாக கருதுவோர் குறைந்த அளவில் உள்ளனர்.
-
திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதாக பெரும்பான்மையானோர் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அரசியல் குறித்து “இனி தான் தெரியும்” என்ற கருத்தே அதிகமாக பதிவாகியுள்ளது.
-
முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் முதல் இடத்திலும், அவரை தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் விஜய் இடம் பெற்றுள்ளனர்.
-
இன்றே தேர்தல் நடந்தால் அதிமுக–பாஜ கூட்டணி முன்னிலை பெறும் என கருத்துக்கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
இந்த கருத்துக்கணிப்பு, தமிழக அரசியலில் வரும் நாட்களில் ஏற்படக்கூடிய மாற்றங்களை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்