உடனடி செய்தி

கோவில் நிதியில் ரூ.246 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகள் ரத்து: தமிழக அரசு உத்தரவு

கோவில் நிதியில் ரூ.246 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகள் ரத்து: தமிழக அரசு உத்தரவு
கோவில் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் அமைக்கும் திட்டங்களுக்கான ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 கட்டுமானப் பணிகளுக்கான நிர்வாக அனுமதிகளை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. முன்னாள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம் பல்வேறு கோவில்களின் நிதியை பயன்படுத்தி திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல், தேனி, பழனி உள்ளிட்ட 27 கோவில்களில் ரூ.80 கோடி செலவில் திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால், கோவில் நிதியை இத்தகைய கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோவில் நிதியில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வெளியிடப்பட்ட அரசாணைகளை ரத்து செய்து உத்தரவிட்டது. தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், கோவில் நிதி புனிதமான மற்றும் பக்தர்களின் நலனுக்கான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட கட்டுமானத் திட்டங்களுக்கான அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் அறிக்கையின்படி, ரூ.115.77 கோடி மதிப்பிலான 29 திருமண மண்டபத் திட்டங்களும், ரூ.130.08 கோடி மதிப்பிலான 17 வணிக வளாகத் திட்டங்களும் சேர்த்து மொத்தம் ரூ.245.85 கோடி மதிப்பிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த நிதி இனி கோவில்கள் மற்றும் பக்தர்கள் நேரடியாக பயன்பெறும் புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
விமானப்படை அதிகாரி மனைவி கட்டாய மதமாற்ற வழக்கு: தேடப்பட்ட மதகுரு கைது
1 நாட்கள் முன்பு
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்பு உள்ளதா?
1 நாட்கள் முன்பு
எதிர்க்கட்சி தலைவர் பதவி திரிணமுலுக்கு மறுப்பு: மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு
எதிர்க்கட்சி தலைவர் பதவி திரிணமுலுக்கு மறுப்பு: மம்தா பானர்ஜிக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு
1 நாட்கள் முன்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சிப்காட் நிர்வாகத்துக்கு பசுமை தீர்ப்பாயம் நோட்டீஸ்
2 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்