செய்திகள்
⚡ உடனடி செய்தி
தமிழக அரசியலில் பரபரப்பு; 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து கட்சி மாறினர்
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி அணியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, ஆளும் கட்சியான த.வெ.க.வில் இணைந்துள்ளனர்.
மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயகுமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் தலைமை செயலகத்தில் சபாநாயகரை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை வழங்கினர். சபாநாயகர் அவற்றை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஏற்கனவே காலியாக இருந்த திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து தற்போது நான்கு தொகுதிகள் காலியாகியுள்ளன.
ராஜினாமாவுக்கு உடனடியாக, மூவரும் த.வெ.க.வில் இணைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கட்சி மாற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அ.தி.மு.க. பலம் குறைவு
சட்டசபை தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தற்போது இந்த ராஜினாமாவால் 44 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கொண்ட கட்சியாகியுள்ளது.
த.வெ.க.க்கு பலம் அதிகரிப்பு
தற்போது த.வெ.க.க்கு 107 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், காலியிடங்கள் காரணமாக தனிப்பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் அரசியல் கணக்கில் த.வெ.க.க்கு இது சாதகமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மூன்று எம்.எல்.ஏ.க்களை த.வெ.க.வில் இணைத்தது குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக வி.சி.க. தரப்பில், இது அரசியல் நெறிமுறைக்கு எதிரான செயல் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் அரசியல் மாற்றம், தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
1 நாட்கள் முன்பு
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
1 நாட்கள் முன்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
1 நாட்கள் முன்பு
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்