செய்திகள்
⚡ உடனடி செய்தி
தஞ்சையில் விழா நடனம் விவகாரம்: தலைமையாசிரியை இடைநீக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, ஒரத்தநாட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அவர் கலந்து கொண்டு, நடிகர் விஜய் நடித்த திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது.
இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சியுடன் தொடர்புடைய நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், நன்னடத்தை விதிகளை மீறியதாகவும் கூறி, பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன், கடந்த 24ஆம் தேதி அவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் குறித்து தலைமையாசிரியை விளக்கம் அளிக்கையில், “நான் ஆண்டுதோறும் மகளிர் தின விழாவை நடத்துவது வழக்கம். தனியார் மண்டபத்தில் த.வெ.க. நிகழ்ச்சி முடிந்த பின், நான் ஏற்பாடு செய்த விழாவில் தான் நடனம் ஆடியேன். ஆனால், அங்கு இருந்த பேனர்கள் அகற்றப்படாததால், அது த.வெ.க. நிகழ்ச்சியாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது,” என்று கூறினார்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வேலுவுக்கு எதிராக எழும் அதிருப்தி: விவசாயிகள் மற்றும் வன்னியர் சமூகத்தின் கோபம் அதிகரிப்பு
17 மணி நேரங்கள் முன்பு
கோவை வடக்கு தொகுதியில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என அரசியல் வட்டார எதிர்பார்ப்பு
18 மணி நேரங்கள் முன்பு
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. அதிருப்தி: “சிரித்துக் கொண்டே அழுகிறோம்” என வேதனை
18 மணி நேரங்கள் முன்பு
புதுச்சேரி தேர்தல்: காங்கிரசை விமர்சித்த திருமாவளவன் – வி.சி.க. தனித்து போட்டி அறிவிப்பு
18 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்