உடனடி செய்தி

தஞ்சையில் விழா நடனம் விவகாரம்: தலைமையாசிரியை இடைநீக்கம்

தஞ்சையில் விழா நடனம் விவகாரம்: தலைமையாசிரியை இடைநீக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், அருகிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வந்தார். சில நாட்களுக்கு முன்பு, ஒரத்தநாட்டில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் அவர் கலந்து கொண்டு, நடிகர் விஜய் நடித்த திரைப்படப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக வைரலானது. இதனைத் தொடர்ந்து, அரசியல் கட்சியுடன் தொடர்புடைய நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும், நன்னடத்தை விதிகளை மீறியதாகவும் கூறி, பட்டுக்கோட்டை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மதியழகன், கடந்த 24ஆம் தேதி அவரை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து தலைமையாசிரியை விளக்கம் அளிக்கையில், “நான் ஆண்டுதோறும் மகளிர் தின விழாவை நடத்துவது வழக்கம். தனியார் மண்டபத்தில் த.வெ.க. நிகழ்ச்சி முடிந்த பின், நான் ஏற்பாடு செய்த விழாவில் தான் நடனம் ஆடியேன். ஆனால், அங்கு இருந்த பேனர்கள் அகற்றப்படாததால், அது த.வெ.க. நிகழ்ச்சியாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது,” என்று கூறினார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
2 மணி நேரங்கள் முன்பு
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா
2 மணி நேரங்கள் முன்பு
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
2 மணி நேரங்கள் முன்பு
காங்கிரஸ் மீது தி.மு.க. கடும் விமர்சனம் | அரசியல் பரபரப்பு
காங்கிரஸ் மீது தி.மு.க. கடும் விமர்சனம் | அரசியல் பரபரப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்