செய்திகள்
⚡ உடனடி செய்தி
வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.3,237 ஆக உயர்வு – ஹோட்டல் துறைக்கு கடும் பாதிப்பு
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாகக் கொண்டு மாதந்தோறும் எல்பிஜி சிலிண்டர் விலையை மாற்றி வருகின்றன.
மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட பதற்றம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக, இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர் விலை திடீரென ரூ.990.50 உயர்ந்து, ரூ.3,237 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில், ஏற்கனவே காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், இந்த விலை உயர்வு ஹோட்டல் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு கடும் சுமையாக மாறியுள்ளது. பல ஹோட்டல்கள் மின்சார அடுப்புகளுக்கு மாறியுள்ளன.
இதன் விளைவாக, டீ, காபி, இட்லி, தோசை, உணவுகள் போன்றவற்றின் விலை ரூ.5 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. மேலும் இந்த விலை உயர்வு நீடித்தால், உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இந்த திடீர் விலை உயர்வை எதிர்த்து, மத்திய அரசு இதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கை: தப்பிக்க விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி
21 மணி நேரங்கள் முன்பு
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி; விசாரணை தீவிரம்
21 மணி நேரங்கள் முன்பு
கோவில் குளங்களில் நீர்தரத்தை பாதுகாக்க நடவடிக்கை: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
1 நாட்கள் முன்பு
டாஸ்மாக் கடைகளில் 50% தனியார்மயம்? தமிழக அரசு தீவிர ஆலோசனை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்