காமன்வெல்த் 2026: ஈட்டி எறிதல் பைனலுக்கு நீரஜ் சோப்ரா; தமிழக வீரர்களும் அசத்தல்
ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதிச்சுற்றில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 79.61 மீட்டர் எறிந்து பைனலுக்கு தகுதி பெற்றார். கடும் எதிர்க்காற்று மற்றும் குளிரான வானிலை காரணமாக எந்த வீரரும் நேரடி தகுதி இலக்கான 84 மீட்டரை எட்டவில்லை. இதனால் முன்னிலை பெற்ற 12 வீரர்கள் பைனலுக்கு முன்னேறினர்.
இந்திய வீரர்களான ரோகித் யாதவ் (78.37 மீ.) மற்றும் யாஷ்வீர் சிங் (78.36 மீ.) ஆகியோரும் பைனல் சுற்றுக்குத் தகுதி பெற்றனர். இலங்கையின் ருமேஷ் தரங்கா 82.84 மீட்டர் எறிந்து தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்தார்.
டிரிபிள் ஜம்ப் தகுதிச்சுற்றில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் (16.41 மீ.) மற்றும் செல்வ பிரபு (16.26 மீ.) சிறப்பாக செயல்பட்டு பைனலுக்குள் நுழைந்தனர். 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் தமிழரசன் மற்றும் யாஷஸ் பாலக் ஷா ஆகியோரும் பைனல் வாய்ப்பை உறுதி செய்தனர்.
பெண்கள் குண்டு எறிதலில் மன்பிரீத் கவுர் நான்காவது இடத்தையும், 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸில் பாருல் சவுத்ரி ஐந்தாவது இடத்தையும் பெற்றனர். நீச்சலில் ஆர்யன் நெஹ்ரா 1500 மீட்டர் பிரீஸ்டைலில் ஏழாவது இடமும், பெண்கள் +86 கிலோ பளுதூக்குதலில் மார்டினா தேவி ஐந்தாவது இடமும் பிடித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
காமன்வெல்த் 2026: குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பெருமை
1 நாட்கள் முன்பு
காமன்வெல்த் 2026: ஷர்மிளா தங்கம், மீராபாய் மின்னல், இந்தியா பதக்க வேட்டை தொடர்கிறது
2 நாட்கள் முன்பு
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 6வது பதக்கம்; பிந்தியாராணி தேவி வெண்கலம் வென்றார்
3 நாட்கள் முன்பு
வைபவ் சூர்யவன்ஷி அசத்தல்; ஜிம்பாப்வேயை வீழ்த்தி 3-0 என டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய இந்தியா
4 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்