உடனடி செய்தி

“நம்பிக்கை இழக்காத போராளி கோலி – இளம் வீரர்களுக்கு வாழ்நாள் பாடம்: கவாஸ்கர்”

“நம்பிக்கை இழக்காத போராளி கோலி – இளம் வீரர்களுக்கு வாழ்நாள் பாடம்: கவாஸ்கர்”

இந்துாரில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்தாலும், விராத் கோலியின் போராட்டம் கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. 338 ரன் என்ற இமாலய இலக்கை துரத்திய இந்தியா, ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது. ஒரு முனையில் கோலி பொறுப்புடன் விளையாடி 124 ரன் விளாசினார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 54வது சதமாகும்.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், “கோலி ஒருபோதும் நம்பிக்கையை இழக்க மாட்டார். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவார். கடைசி வரை போராடுவார். இது இளம் வீரர்களுக்கான மிகச் சிறந்த பாடம்” என்று பாராட்டினார்.

மேலும், இந்திய அணியின் தோல்விக்கு பீல்டிங் குறைபாடுகளும் காரணம் எனக் குறிப்பிட்ட கவாஸ்கர், சில வீரர்கள் எளிதான சிங்கிள்களை அனுமதித்ததால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தமின்றி ரன் குவித்தனர் என்றார். அனுபவ வீரர்கள் இல்லாமலேயே நியூசிலாந்து இந்திய மண்ணில் வரலாற்றுச் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்மிருதி மந்தனா ரூ.1.11 கோடிக்கு மான்செஸ்டர் அணியில் – ‘தி ஹண்டிரடு’ பெண்கள் கிரிக்கெட் தொடரில் பெரிய ஒப்பந்தம்
ஸ்மிருதி மந்தனா ரூ.1.11 கோடிக்கு மான்செஸ்டர் அணியில் – ‘தி ஹண்டிரடு’ பெண்கள் கிரிக்கெட் தொடரில் பெரிய ஒப்பந்தம்
19 மணி நேரங்கள் முன்பு
சி.கே. நாயுடு டிராபி: மகாராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன்
சி.கே. நாயுடு டிராபி: மகாராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன்
1 நாட்கள் முன்பு
பும்ரா கவனம் ஒருநாள் போட்டிகளுக்கு; 2027 உலகக்கோப்பை நோக்கி இந்திய அணி திட்டம்
பும்ரா கவனம் ஒருநாள் போட்டிகளுக்கு; 2027 உலகக்கோப்பை நோக்கி இந்திய அணி திட்டம்
2 நாட்கள் முன்பு
டி-20 உலக கோப்பை 2026: இந்தியா சாம்பியன் – முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழை
டி-20 உலக கோப்பை 2026: இந்தியா சாம்பியன் – முன்னாள் வீரர்களின் வாழ்த்து மழை
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்