உடனடி செய்தி

6ம் வகுப்பு முதல் மும்மொழி கட்டாயம்: கணிதம், அறிவியலுக்கு இரு நிலை தேர்வு – சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு

6ம் வகுப்பு முதல் மும்மொழி கட்டாயம்: கணிதம், அறிவியலுக்கு இரு நிலை தேர்வு – சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு
புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப முக்கியமான பாடத்திட்ட மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, 2026-27 கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கற்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதில் இரண்டு இந்திய மொழிகளும், ஒரு வெளிநாட்டு மொழியும் சேர்ந்து இருக்க வேண்டும். இந்த மாற்றத்தின் மூலம் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளை கற்கும் நிலை உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஒன்பதாம் வகுப்பு முதல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ‘ஸ்டாண்டர்டு’ மற்றும் ‘அட்வான்ஸ்டு’ என இரு நிலை கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. அனைத்து மாணவர்களும் ‘ஸ்டாண்டர்டு’ நிலையை கட்டாயமாக தேர்வு செய்து, 80 மதிப்பெண் கொண்ட மூன்று மணி நேர பொதுத் தேர்வை எழுத வேண்டும். மேம்பட்ட திறனை விரும்பும் மாணவர்கள் ‘அட்வான்ஸ்டு’ நிலையை கூடுதலாக தேர்வு செய்யலாம். இந்த தேர்வு 25 மதிப்பெண் கொண்ட ஒரு மணி நேர தனி தேர்வாக இருக்கும். ‘அட்வான்ஸ்டு’ தேர்வின் மதிப்பெண் மொத்த மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. ஆனால் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அது தனியாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படும்.

தொடர்புடைய செய்திகள்

துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
18 நிமிடங்கள் முன்பு
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா
மதமாற்றம் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை: அமித் ஷா
24 நிமிடங்கள் முன்பு
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு தாக்கம்; பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம்
28 நிமிடங்கள் முன்பு
காங்கிரஸ் மீது தி.மு.க. கடும் விமர்சனம் | அரசியல் பரபரப்பு
காங்கிரஸ் மீது தி.மு.க. கடும் விமர்சனம் | அரசியல் பரபரப்பு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்