செய்திகள்
⚡ உடனடி செய்தி
6ம் வகுப்பு முதல் மும்மொழி கட்டாயம்: கணிதம், அறிவியலுக்கு இரு நிலை தேர்வு – சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு
புதுடில்லி: மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப முக்கியமான பாடத்திட்ட மாற்றங்களை அறிவித்துள்ளது.
அதன்படி, 2026-27 கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கற்பது கட்டாயமாக்கப்படுகிறது. இதில் இரண்டு இந்திய மொழிகளும், ஒரு வெளிநாட்டு மொழியும் சேர்ந்து இருக்க வேண்டும்.
இந்த மாற்றத்தின் மூலம் மாணவர்கள் குறைந்தது இரண்டு இந்திய மொழிகளை கற்கும் நிலை உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஒன்பதாம் வகுப்பு முதல் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ‘ஸ்டாண்டர்டு’ மற்றும் ‘அட்வான்ஸ்டு’ என இரு நிலை கற்றல் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
அனைத்து மாணவர்களும் ‘ஸ்டாண்டர்டு’ நிலையை கட்டாயமாக தேர்வு செய்து, 80 மதிப்பெண் கொண்ட மூன்று மணி நேர பொதுத் தேர்வை எழுத வேண்டும்.
மேம்பட்ட திறனை விரும்பும் மாணவர்கள் ‘அட்வான்ஸ்டு’ நிலையை கூடுதலாக தேர்வு செய்யலாம். இந்த தேர்வு 25 மதிப்பெண் கொண்ட ஒரு மணி நேர தனி தேர்வாக இருக்கும்.
‘அட்வான்ஸ்டு’ தேர்வின் மதிப்பெண் மொத்த மதிப்பெண்களில் சேர்க்கப்படாது. ஆனால் 50% அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அது தனியாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிடப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சீட் ஒதுக்கீட்டில் மாற்றம்: ஒரு தொகுதியை திருப்பி அளித்த ஏ.சி. சண்முகம்
22 மணி நேரங்கள் முன்பு
சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திய விவகாரம்: தி.மு.க. வீடியோ சர்ச்சை
22 மணி நேரங்கள் முன்பு
ராஜா பழைய ஆடியோ சர்ச்சை: தி.மு.க.வில் உள் பதற்றம் அதிகரிப்பு
22 மணி நேரங்கள் முன்பு
இந்தியாவின் 3வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ‘அரிதமன்’ கடற்படையில் இணைப்பு
22 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்