அந்தமானில் கடலடியில் 2,400 சதுர மீட்டர் தேசியக்கொடி விரித்து கின்னஸ் சாதனை
போர்ட் பிளேயர்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்வராஜ் தீவில் கடலடியில் பிரமாண்டமான இந்திய தேசியக்கொடி விரித்து கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. சுமார் 2,400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த கொடி, வங்காள விரிகுடாவின் நீர்மட்டத்தின் கீழ் விரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனையை நிகழ்த்த வனத்துறை, கடலோர காவல் படை மற்றும் தனியார் ஸ்கூபா டைவிங் குழுவினர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இணைந்து பணியாற்றினர். இந்த முயற்சியின் மூலம் அந்தமான் தீவுகளை உலகத் தரம் வாய்ந்த ஸ்கூபா டைவிங் மற்றும் கடல்சார் சுற்றுலா மையமாக மேம்படுத்துவது நோக்கமாக உள்ளது.
இந்த சாதனைக்கு அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி கின்னஸ் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். மேலும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மே 3ஆம் தேதி ஸ்வராஜ் தீவில் உள்ள லைட் ஹவுஸ் அருகே கடலடியில் குறைந்தபட்சம் 10 மீட்டர் உயரத்தில் மனித அடுக்கை உருவாக்கி மற்றொரு கின்னஸ் சாதனை முயற்சியும் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கோவையில் கீழடிக்கு முந்தைய கால மனித எலும்புக்கூடு மற்றும் கடல் சங்கு கண்டுபிடிப்பு
10 மணி நேரங்கள் முன்பு
தி.மு.க. கூட்டணியில் பதற்றம்: ‘கம்பி நீட்ட’ சைகை காட்டும் கூட்டணி தலைவர்கள்
10 மணி நேரங்கள் முன்பு
நாளைய NEET தேர்வு 2026: முழுக்கை ஆடைக்கு அனுமதி – NTA அறிவிப்பு
1 நாட்கள் முன்பு
மதுரை சித்திரை விழா: வைகையில் கள்ளழகர் தரிசனத்தின் போது பக்தர்கள் மீது காலணி வீச்சு சர்ச்சை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்