அ.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு தவெக அழைப்பு? சட்டசபையில் தனி அணியாக திரள வியூகம்
சென்னை: சட்டசபையில் தனி அணியாக செயல்படும் வகையில், அ.தி.மு.க., அதிருப்தி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க த.வெ.க., தரப்பில் முயற்சி நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில், அ.தி.மு.க., அதிருப்தி அணியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனினும், அவர்கள் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் இதுவரை சமரசம் செய்து கொள்ளவில்லை.
முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சண்முகம், விஸ்வநாதன், அன்பழகன் உள்ளிட்டோர் தனி அணியாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வேலுமணி தலைமையிலான அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கடந்த 6ம் தேதி த.வெ.க., பொதுச்செயலரும் அமைச்சருமான ஆனந்தை சந்தித்துள்ளனர். தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
த.வெ.க., அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் பின்னர் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அ.தி.மு.க., அதிருப்தி அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தங்களது அணியில் இருந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க., பக்கம் சென்றதால் அணி பலவீனமடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது த.வெ.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மாற்றாக, அ.தி.மு.க., அதிருப்தி அணியை பயன்படுத்தும் முயற்சி நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக, கட்சி தாவல் தடை சட்டத்தின் சிக்கல்களை தவிர்க்கும் வகையில் போதுமான எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.,க்களை ஒருங்கிணைத்து தனி அணியாக செயல்படுமாறு அதிருப்தியாளர்களிடம் த.வெ.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அணி பலம் பெற்றால் தேவையான அரசியல் மற்றும் நிர்வாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் த.வெ.க., தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடம் வேலுமணி தரப்பினர் மீண்டும் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகாத நிலையில், தமிழக அரசியலில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 மணி நேரங்கள் முன்பு
டெண்டர் ரத்து செய்வதிலும் முறைகேடா? அமைச்சர்கள் மீது அதிர்ச்சி புகார்
2 மணி நேரங்கள் முன்பு
பழனி கோவில் நில மோசடி: சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; விசாரணை தீவிரம்
1 நாட்கள் முன்பு
ரூ.400 கோடி கோவில் நிலங்களை விற்க முயற்சி? தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் சொத்து விவகாரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்