உடனடி செய்தி

சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்

சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த முதல்வர் விஜயின் பேச்சு, சினிமா பாணியில் இருந்ததாகவும், சட்டசபையை படப்பிடிப்பு தளமாக மாற்றிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய் தயாரிக்கப்பட்ட உரையை மட்டுமே வாசித்ததாகவும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததாகவும் விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும் அவர் கூறினார். கவர்னர் உரையின்போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்தும் அதேபோல் பாடப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்தார். அத்துடன், சட்டசபை விவாதங்கள் சினிமா விழாக்கள் மற்றும் பிரசார மேடைகளில் பேசப்படுவது போல அமைந்திருந்ததாகவும், சமூக வலைதளங்களில் பரவும்வகையில் திட்டமிட்டு பேச்சுகள் இடம்பெற்றதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். மேலும், கட்சி நிதி வசூல் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
5 மணி நேரங்கள் முன்பு
டெண்டர் ரத்து செய்வதிலும் முறைகேடா? அமைச்சர்கள் மீது அதிர்ச்சி புகார்
டெண்டர் ரத்து செய்வதிலும் முறைகேடா? அமைச்சர்கள் மீது அதிர்ச்சி புகார்
5 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு தவெக அழைப்பு? சட்டசபையில் தனி அணியாக திரள வியூகம்
அ.தி.மு.க., அதிருப்தியாளர்களுக்கு தவெக அழைப்பு? சட்டசபையில் தனி அணியாக திரள வியூகம்
5 மணி நேரங்கள் முன்பு
பழனி கோவில் நில மோசடி: சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; விசாரணை தீவிரம்
பழனி கோவில் நில மோசடி: சார்-பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது; விசாரணை தீவிரம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்