சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்குப் பதிலளித்த முதல்வர் விஜயின் பேச்சு, சினிமா பாணியில் இருந்ததாகவும், சட்டசபையை படப்பிடிப்பு தளமாக மாற்றிவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வர் விஜய் தயாரிக்கப்பட்ட உரையை மட்டுமே வாசித்ததாகவும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருந்ததாகவும் விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு பிரச்னைகளுக்கு தி.மு.க. மீது தொடர்ந்து குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகவும் அவர் கூறினார். கவர்னர் உரையின்போது தேசிய கீதம் இரண்டு முறை பாடப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், தமிழ்த்தாய் வாழ்த்தும் அதேபோல் பாடப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்தார்.
அத்துடன், சட்டசபை விவாதங்கள் சினிமா விழாக்கள் மற்றும் பிரசார மேடைகளில் பேசப்படுவது போல அமைந்திருந்ததாகவும், சமூக வலைதளங்களில் பரவும்வகையில் திட்டமிட்டு பேச்சுகள் இடம்பெற்றதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார்.
மேலும், கட்சி நிதி வசூல் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருந்தால் அவற்றை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
1 மணி நேரங்கள் முன்பு
மாணவியுடன் அமைச்சர் நடந்துகொண்ட விதம் சர்ச்சை; வைரலாகும் வீடியோ
1 மணி நேரங்கள் முன்பு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
1 நாட்கள் முன்பு
ஆள் சேர்ப்பதை விட ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்; முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்