தேர்தல் செலவுக்கு புதிய விலை பட்டியல்: 2 இட்லி ₹40, அசைவ சாப்பாடு ₹350 – கட்சிகள் அதிர்ச்சி
கோவை: வரவிருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் செலவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சமாக ₹40 லட்சம் மட்டுமே செலவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தில் செய்யப்படும் ஒவ்வொரு செலவுக்கும் தனித்தனி விலை வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டீ, காபி, இட்லி போன்ற உணவுப் பொருட்களின் விலைகள் முதல் மேடை அமைத்தல், பந்தல் போடுதல், போஸ்டர் அச்சடித்தல், பிட் நோட்டீஸ் விநியோகம், நாற்காலி வாடகை, மைக் செட், டாக்சி மற்றும் வேன் வாடகை, டிரைவர் சம்பளம் போன்ற பல செலவுகளுக்கு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் 2 இட்லி ₹40 என்றும், அசைவ சாப்பாடு ₹350 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.
இதுகுறித்து திமுக நிர்வாகி அன்புசெழியன் கூறுகையில், “நாற்காலி வாடகை ₹10, வி.ஐ.பி. சேர் வாடகை ₹280 என்பது அதிகமாக உள்ளது. பொதுவாக தொண்டர்களுக்கு மொத்தமாக உணவு ஆர்டர் செய்தால் செலவு குறைவாக இருக்கும். ஆனால் ஆணையம் வெளியிட்டுள்ள விலை பட்டியல் நடைமுறைக்கு பொருந்தாததாக உள்ளது,” என்றார்.
மேலும் இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அ.தி.மு.க.வில் பெரிய பிளவு? பழனிசாமிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் – வேலுமணி அணியின் சவால்
5 மணி நேரங்கள் முன்பு
புதிய அரசு 5 ஆண்டுகள் நீடிக்குமா? – இப்போது சொல்ல முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
5 மணி நேரங்கள் முன்பு
மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
5 மணி நேரங்கள் முன்பு
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
20 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்