ஜான் பிரிட்டோ என் உறவினர் அல்ல; ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் ஆதவ்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆதவ் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஜான் பிரிட்டோ தன் உறவினர் அல்ல என்றும், இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டாலின் தனது பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம் | பள்ளி உத்தரவு திரும்பப் பெற கோரிக்கை
8 மணி நேரங்கள் முன்பு
தமிழகத்தின் உண்மையான கடன் ரூ.13.18 லட்சம் கோடி; வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
9 மணி நேரங்கள் முன்பு
மேற்கு ஆசிய பதற்றம்: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் 18,000 இந்திய மாலுமிகள் பாதுகாப்பு கண்காணிப்பு தீவிரம்
1 நாட்கள் முன்பு
அ.தி.மு.க. சிதைவை கண்டு கவலைப்படும் ஸ்டாலின்? அதிருப்தி நிர்வாகிகளிடம் நேரடி தொடர்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்