ஜான் பிரிட்டோ என் உறவினர் அல்ல; ஸ்டாலினுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் ஆதவ்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஜான் பிரிட்டோ, அமைச்சர் ஆதவின் நெருங்கிய உறவினர் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆதவ் சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான தகவல் பரப்பப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஜான் பிரிட்டோ தன் உறவினர் அல்ல என்றும், இதுகுறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்டாலின் தனது பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தவறினால் குற்றவியல் மற்றும் உரிமையியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ஆதவ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்