கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா; இன்று ராஜினாமா
கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், முதல்வர் சித்தராமையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தபோது, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது குறித்து ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
மூன்று ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்த சித்தராமையா, டில்லியில் காங்கிரஸ் மேலிடத்துடன் நடந்த நீண்ட ஆலோசனைக்குப் பிறகு பதவி விலக சம்மதித்ததாக கூறப்படுகிறது. இன்று காலை கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ராஜினாமாவிற்கு முன் அமைச்சர்களுக்கு தனது இல்லத்தில் காலை உணவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் டி.கே. சிவகுமாரும் பங்கேற்கிறார்.
சித்தராமையாவின் விலகலுக்கு பின், டி.கே. சிவகுமார் கர்நாடகத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் ரீல்ஸ் சர்ச்சை; பாதுகாப்பு நடைமுறைகள் கேள்விக்குறி
11 மணி நேரங்கள் முன்பு
பள்ளிகளில் விபூதி, குங்குமம் அணிவதில் தவறில்லை: அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
11 மணி நேரங்கள் முன்பு
பழனிசாமி தலைமையை சி.வி.சண்முகம் சாடல்: அதிமுக எதிர்காலம் குறித்து கடும் எச்சரிக்கை
11 மணி நேரங்கள் முன்பு
100 ஆண்டுகளை நிறைவு செய்த ஆர்எஸ்எஸ் குறித்து விழிப்புணர்வு தேவை: மோகன் பகவத்
20 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்