கிண்டி சிறுவர் பூங்கா மூடல்: பறவை காய்ச்சல் காரணமாக 50+ பறவைகள் உயிரிழப்பு
சென்னை அடையாறு பகுதியில் அமைந்துள்ள கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் கொத்துக் கொத்தாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் பார்வைக்காக வேடந்தாங்கல் பகுதிகளில் காணப்படும் பல்வேறு பறவைகள் இங்கு கூண்டுகளில் பராமரிக்கப்பட்டு வந்தன.
சமீப நாட்களில், 200க்கும் மேற்பட்ட பறவைகளில் 50க்கும் அதிகமானவை இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக காகங்கள், புறாக்கள் மற்றும் நீர்ப்பறவைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இறந்த காகங்களின் மாதிரிகள் மத்திய பிரதேசத்தின் போபாலில் உள்ள கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதில் பறவை காய்ச்சல் (Avian Influenza) இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிண்டி சிறுவர் பூங்கா திடீரென மூடப்பட்டுள்ளது. வழக்கமாக செவ்வாய்க்கிழமை பராமரிப்பு காரணமாக விடுமுறை அளிக்கப்படும் நிலையில், தொடர்ந்து இரண்டு நாட்கள் பூங்கா மூடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் பறவைகள் இறப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. எனினும், மனிதர்களுக்கு இதுவரை நேரடி பாதிப்பு எதுவும் இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரசு துறைகள் விரைவாக நடவடிக்கை எடுத்து, பறவை காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
9 மணி நேரங்கள் முன்பு
இரு இந்தியர்களுக்கு ஹண்டா வைரஸ் அபாயம் – சொகுசு கப்பலில் பரபரப்பு
9 மணி நேரங்கள் முன்பு
தமிழகத்தில் ஆட்சி யார்? 116-116 சமநிலை; விஜய் பெரும்பான்மைக்கு இன்னும் ஒரு படி தூரம்
9 மணி நேரங்கள் முன்பு
காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக சின்னம் – சோம்நாத் கோவில்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்