செய்திகள்
⚡ உடனடி செய்தி
நாகர்கோவிலில் இன்று நரேந்திர மோடி ரோடு ஷோ; எடப்பாடி கே. பழனிசாமி பங்கேற்பு
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.) வேட்பாளர்களுக்கு ஆதரவாக, நரேந்திர மோடி இன்று நாகர்கோவில் நகரில் ரோடு ஷோ மூலம் தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டம் உட்பட்ட நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல் மற்றும் விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பா.ஜ. போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிடும் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவே இந்த பிரசாரம் நடைபெறுகிறது.
இன்று மாலை, திருவனந்தபுரம் நகரில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவிலுக்கு வரும் பிரதமர், அங்கு திறந்த வாகனத்தில் ரோடு ஷோ நடத்த உள்ளார்.
இந்த ரோடு ஷோவில், எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, வரும் 18ஆம் தேதி, கோவை நகரில் நடைபெறும் பிரசாரத்திலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்திய விமானங்களுக்கு அச்சுறுத்தல்? பாகிஸ்தான் சதிக்கு கடும் நடவடிக்கை தேவை: ஹிந்து முன்னணி
15 மணி நேரங்கள் முன்பு
இன்று 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்
15 மணி நேரங்கள் முன்பு
கிராமிய சினிமாவின் முகவரியான பாரதிராஜா காலமானார்
15 மணி நேரங்கள் முன்பு
மார்ட்டின் குடும்ப சொத்து பறிமுதல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்