உடனடி செய்தி

நத்தம் அருகே குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு – உறவினர்கள் முற்றுகை

நத்தம் அருகே குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் உடல் மீட்பு – உறவினர்கள் முற்றுகை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சரளைப்பட்டி பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில், இளைஞர் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரளைப்பட்டியில் உள்ள சங்கரா ப்ளூ மெட்டல் குவாரி, ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகன் விஜயபாரதி குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார். இந்த குவாரியில் எம்.சாண்ட் குவியலில் சுமார் 10 அடி ஆழத்தில், கருப்பசாமி (25) என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பசாமி, மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குவாரியில் பணிபுரிந்த தொழிலாளர்கள் மணல் அள்ளும் போது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள், குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அரசியல் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
3 மணி நேரங்கள் முன்பு
சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்
சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்
3 மணி நேரங்கள் முன்பு
மாணவியுடன் அமைச்சர் நடந்துகொண்ட விதம் சர்ச்சை; வைரலாகும் வீடியோ
மாணவியுடன் அமைச்சர் நடந்துகொண்ட விதம் சர்ச்சை; வைரலாகும் வீடியோ
3 மணி நேரங்கள் முன்பு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்