‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
‘கோவில் நிதி கோவிலுக்கே’ என்ற தமிழக அரசின் கொள்கை அறிவிப்பை ஹிந்து முன்னணி வரவேற்றுள்ளது. கவர்னர் உரையில் இடம்பெற்ற இந்த அறிவிப்பு கோவில் நிர்வாகம் மற்றும் நிதி பாதுகாப்புக்கான முக்கிய நடவடிக்கையாக இருப்பதாக அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், கோவில்களுக்கு கிடைக்கும் நிதி மீண்டும் கோவில்களின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற கொள்கை பாராட்டத்தக்கது என கூறினார்.
மேலும், கோவில் நிதி பயன்பாடு குறித்து எழுப்பப்படும் விமர்சனங்கள் ஒருதலைப்பட்சமானவை என்றும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களின் நிதி நிர்வாகத்தையும் ஒரே அளவுகோலில் அணுக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் சில கோவில் சீரமைப்பு திட்டங்களில் முறைகேடுகள் மற்றும் நிர்வாக குறைபாடுகள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், கோவில்களின் சொத்துகள் மற்றும் நிதி நிர்வாகம் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
அத்துடன், கோவில்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகள், நிலங்கள் மற்றும் வருவாய் தொடர்பான விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்
2 மணி நேரங்கள் முன்பு
மாணவியுடன் அமைச்சர் நடந்துகொண்ட விதம் சர்ச்சை; வைரலாகும் வீடியோ
2 மணி நேரங்கள் முன்பு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
1 நாட்கள் முன்பு
ஆள் சேர்ப்பதை விட ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்; முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்