தமிழக கோவில்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்; ஹிந்து முன்னணி தீர்மானம்
திருநெல்வேலியில் நடைபெற்ற ஹிந்து முன்னணியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில், தமிழக கோவில்களின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பிற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும் என்ற முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், சமூக மற்றும் ஆன்மிக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்றும், போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துதல், பள்ளிகளில் மத அடையாளங்களுக்கு தடை விதிக்கக் கூடாது என்பதையும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதையும் ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அறநிலையத்துறை வணிக சொத்துகளில் ரூ.250 கோடி வாடகை நிலுவை; விரைவு வசூலுக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவு
16 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, தினகரன்? ஒன்றிணைப்பு முயற்சிக்கு ரகசிய பேச்சுவார்த்தை
16 மணி நேரங்கள் முன்பு
அயோத்தி ராமர் கோவிலில் 60 கிலோ வெள்ளி மாயமா? நன்கொடை விவகாரத்தில் தீவிர விசாரணை
1 நாட்கள் முன்பு
தி.மு.க. கூட்டணியில் இருந்து முஸ்லிம் லீக் விலகல்; ‘தனிமரம்’ ஆகும் சூழல் உருவானதா?
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்