செய்திகள்
⚡ உடனடி செய்தி
திருப்பரங்குன்றம் மலையில் தொழுகைக்கு சென்றவர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம்
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை பகுதியில் அமைந்துள்ள தர்காவிற்கு, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகைக்காக சென்றனர்.
மலைக்கு மேலே செல்லும் முன், பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, அடிவாரத்தில் பணியில் இருந்த போலீசார், வழக்கம்போல் வருகையாளர்களின் பெயர் மற்றும் விபரங்களை பதிவு செய்ய முயன்றனர்.
இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, “ஒவ்வொரு ஆண்டும் அமைதியாக தொழுகை நடத்தி வருகிறோம். ரம்ஜான் போன்ற முக்கிய நாளில் தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது” என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரிகள், இது புதிய நடைமுறை அல்ல, வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கையே என விளக்கம் அளித்தனர். பின்னர், அனைவரின் விவரங்களும் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் மலைமேல் சென்று நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
ஈரான் 4,000 கி.மீ. ஏவுகணை சோதனை: உலக நாடுகள் அதிர்ச்சி
18 மணி நேரங்கள் முன்பு
சேலம் சம்பவம்: தாய், குழந்தை கடத்தல் வழக்கில் கடுமையான நடவடிக்கை கோரி அண்ணாமலை வலியுறுத்தல்
18 மணி நேரங்கள் முன்பு
தூத்துக்குடி அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது – 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
18 மணி நேரங்கள் முன்பு
பிரசார செலவுகள் அதிகரிப்பு: திருப்பூரில் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்