உடனடி செய்தி

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம் | பள்ளி உத்தரவு திரும்பப் பெற கோரிக்கை

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: அமைச்சர் பேச்சுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம் | பள்ளி உத்தரவு திரும்பப் பெற கோரிக்கை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி அமைச்சர் நிர்மல்குமார் பேசியிருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என ஹிந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்ற நிலையில், பழைய நடைமுறையையே தொடர்வோம் என அமைச்சர் கூறியது ஏற்க முடியாதது என்றார். மேலும், பள்ளிகளில் மாணவர்கள் ஜாதி மற்றும் மத அடையாளங்களுடன் வரக்கூடாது என்ற உத்தரவை விமர்சித்த அவர், திருநீறு, குங்குமம் அணிவதும், கைகளில் கயிறு கட்டுவதும் தமிழர் பண்பாட்டின் ஒரு பகுதியாகும்; அவற்றை மத அடையாளமாகக் கருதுவது தவறு என்றார். சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் உயர்த்தும் முயற்சியும் சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

பார்லி. முடக்கம் தொடருமா? ராகுலுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை பலனின்றி முடிவு
பார்லி. முடக்கம் தொடருமா? ராகுலுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை பலனின்றி முடிவு
6 மணி நேரங்கள் முன்பு
கேரளாவில் கனமழை தீவிரம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு, நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள்
கேரளாவில் கனமழை தீவிரம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு, நூற்றுக்கணக்கான நிவாரண முகாம்கள்
6 மணி நேரங்கள் முன்பு
தமிழக நிதிநிலை சீரடைய குறைந்தது 2 ஆண்டுகள் தேவை: பட்ஜெட்டில் அரசு விளக்கம்
தமிழக நிதிநிலை சீரடைய குறைந்தது 2 ஆண்டுகள் தேவை: பட்ஜெட்டில் அரசு விளக்கம்
6 மணி நேரங்கள் முன்பு
ஹார்முஸ் ஜலசந்தி திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை 5% சரிவு
ஹார்முஸ் ஜலசந்தி திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை 5% சரிவு
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்