திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் அதற்கான உறுதியை அளிக்க வேண்டும் என்றும் ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கையில், திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தமிழக அரசு குழப்பமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக அரசு தெரிவித்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நீண்டகால பாரம்பரிய வழக்கங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான விவகாரத்தில் அரசின் தற்போதைய அணுகுமுறை, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறானதாக இருப்பதாகவும், அரசின் நிலைப்பாடு மாற்றப்பட்டு நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படும் என உறுதி அளிக்க வேண்டும் என்றும் ஹிந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
ஆள் சேர்ப்பதை விட ஆட்சியில் கவனம் செலுத்துங்கள்; முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
16 மணி நேரங்கள் முன்பு
தமிழக கோவில்களை பாதுகாக்க தனி வாரியம் அமைக்க வேண்டும்; ஹிந்து முன்னணி தீர்மானம்
1 நாட்கள் முன்பு
அறநிலையத்துறை வணிக சொத்துகளில் ரூ.250 கோடி வாடகை நிலுவை; விரைவு வசூலுக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவு
1 நாட்கள் முன்பு
அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலா, தினகரன்? ஒன்றிணைப்பு முயற்சிக்கு ரகசிய பேச்சுவார்த்தை
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்