தூத்துக்குடி அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது – 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வாகைகுளம் அருகே நடைபெற்றது. பயணத்தின் போது பஸ்ஸில் திடீரென புகை எழுந்து, பின்னர் தீ வேகமாக பரவியது. இதை கவனித்த பயணிகள் உடனடியாக சுதாரித்து, அலறியபடி பஸ்ஸிலிருந்து வெளியேறினர்.
இதனால், பஸ்ஸில் இருந்த 60 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் கிடைத்தவுடன் சிப்காட் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
பேருந்தில் தீப்பற்றியதற்கான சரியான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
9 மணி நேரங்கள் முன்பு
இரு இந்தியர்களுக்கு ஹண்டா வைரஸ் அபாயம் – சொகுசு கப்பலில் பரபரப்பு
9 மணி நேரங்கள் முன்பு
தமிழகத்தில் ஆட்சி யார்? 116-116 சமநிலை; விஜய் பெரும்பான்மைக்கு இன்னும் ஒரு படி தூரம்
9 மணி நேரங்கள் முன்பு
காலத்தால் அழியாத பாரதத்தின் ஆன்மிக சின்னம் – சோம்நாத் கோவில்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்