தூத்துக்குடி அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது – 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் வாகைகுளம் அருகே நடைபெற்றது. பயணத்தின் போது பஸ்ஸில் திடீரென புகை எழுந்து, பின்னர் தீ வேகமாக பரவியது. இதை கவனித்த பயணிகள் உடனடியாக சுதாரித்து, அலறியபடி பஸ்ஸிலிருந்து வெளியேறினர்.
இதனால், பஸ்ஸில் இருந்த 60 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் கிடைத்தவுடன் சிப்காட் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
பேருந்தில் தீப்பற்றியதற்கான சரியான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ. இளைஞர்கள் த.வெ.க.வுக்கு தாவல்: அண்ணாமலை அடுத்த அரசியல் முடிவு என்ன?
19 மணி நேரங்கள் முன்பு
அ.தி.மு.க. உள்கட்சி மோதல்: மாவட்ட செயலர்கள் கூட்டிய பழனிசாமி, ஆதரவு கடிதங்கள் மூலம் பலம் காட்ட முயற்சி
19 மணி நேரங்கள் முன்பு
ஆனைமங்கலம் செப்பேடு இந்தியா திரும்புகிறது: சோழர் வரலாற்றின் அரிய பொக்கிஷம்
19 மணி நேரங்கள் முன்பு
AIADMK உள்கட்சி பிரச்சனை: Edappadi K. Palaniswami சமரச முயற்சி – பொதுக்குழு மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்