உடனடி செய்தி

தூத்துக்குடி அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது – 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

தூத்துக்குடி அருகே அரசு பஸ் தீப்பற்றி எரிந்தது – 60 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் வாகைகுளம் அருகே நடைபெற்றது. பயணத்தின் போது பஸ்ஸில் திடீரென புகை எழுந்து, பின்னர் தீ வேகமாக பரவியது. இதை கவனித்த பயணிகள் உடனடியாக சுதாரித்து, அலறியபடி பஸ்ஸிலிருந்து வெளியேறினர். இதனால், பஸ்ஸில் இருந்த 60 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் கிடைத்தவுடன் சிப்காட் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். பேருந்தில் தீப்பற்றியதற்கான சரியான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
‘கோவில் நிதி கோவிலுக்கே’ கொள்கை வரவேற்பு; தமிழக அரசை பாராட்டிய ஹிந்து முன்னணி
2 மணி நேரங்கள் முன்பு
சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்
சட்டசபையை சினிமா செட்டாக மாற்றிவிட்டார் விஜய்; உதயநிதி கடும் விமர்சனம்
3 மணி நேரங்கள் முன்பு
மாணவியுடன் அமைச்சர் நடந்துகொண்ட விதம் சர்ச்சை; வைரலாகும் வீடியோ
மாணவியுடன் அமைச்சர் நடந்துகொண்ட விதம் சர்ச்சை; வைரலாகும் வீடியோ
3 மணி நேரங்கள் முன்பு
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்; ஹிந்து முன்னணி கோரிக்கை
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்