துலாபார நேர்த்திக்கடன் செலுத்திய கேரள முதல்வர் சதீசன்
கேரள முதல்வர் சதீசன், நேற்று காலை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முதல்வராக பதவியேற்ற பின் அவர் முதன்முறையாக இந்த கோவிலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
காலை 7 மணியளவில் கோவிலுக்கு வந்த முதல்வர் சதீசனை, குருவாயூர் தேவஸ்வம் தலைவர் கோபிநாத் மற்றும் நிர்வாக அதிகாரி அருண்குமார் முறைப்படி வரவேற்றனர்.
மூலவரை வழிபட்ட பிறகு, தன் உடல் எடைக்கு நிகராக வெண்ணெய் வழங்கும் ‘துலாபார நேர்த்திக்கடன்’ செலுத்தினார். இதற்காக 71 கிலோ வெண்ணெய் பயன்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சதீசன், முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக குருவாயூர் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது அரசியல் மற்றும் பக்தர்கள் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தரிசனத்தை முடித்த அவர், கேரள வருவாய் துறை அமைச்சர் அனில் குமார் மகன் திருமண விழாவிலும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்புடைய செய்திகள்
கோவையில் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு; புதிய இயக்கத்திற்கு ஆதரவு அதிகரிப்பு
1 நாட்கள் முன்பு
மூகாம்பிகை அம்மனை தரிசித்த முதல்வர் விஜய்; வெள்ளி வாள் காணிக்கை செலுத்தினார்
1 நாட்கள் முன்பு
கிறிஸ்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற சபாநாயகர், அமைச்சர் மீது தவெக அதிருப்தி? கட்சிக்குள் பரபரப்பு
1 நாட்கள் முன்பு
ஆசியாவின் ஒரே சிற்பக்கல்லூரி அவலநிலை: 90% ஆசிரியர் பணியிடங்கள் காலி, முதல்வர் பதவியும் வெற்றிடம்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்