செய்திகள்
⚡ உடனடி செய்தி
ஆந்திர போலீஸ் நடவடிக்கை: நாடு முழுவதும் தேடுதல் – 12 தீவிரவாதிகள் கைது
அமராவதி: ஆந்திரப் பிரதேச போலீசார் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி, பல்வேறு மாநிலங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, சமூக வலைதளங்கள் மூலம் தீவிரவாத கருத்துகளை பரப்பிய மூவர் விஜயவாடாவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் முகமது ரஹ்மத்துல்லா ஷரீப், மிர்ஷா சோகைல் பெக் மற்றும் முகமது தனிஷ் என அடையாளம் காணப்பட்டனர்.
விசாரணையில், ‘அல் மாலிக் இஸ்லாமிக் யூத்’ என்ற அமைப்பை உருவாக்கி, அல்-குவைதா மற்றும் ஐ.எஸ். போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், வெளிநாட்டை சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் ‘அல்-ஹக்கீம் ஷுகூர்’ உடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. இவர்கள் பீஹார் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள நபர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேடுதல் நடவடிக்கை நடத்தி மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி இளைஞர்களை தீவிரவாத அமைப்புகளில் சேர்க்க முயன்றதுடன், பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அ.தி.மு.க. 169 தொகுதிகளில் போட்டி: கூட்டணி கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு
16 மணி நேரங்கள் முன்பு
பொதுத்தேர்வில் முறைகேடு சர்ச்சை: ஆசிரியர்கள் ‘பிடித்தாலும் தப்பு, விட்டாலும் தப்பு’ என வேதனை
20 மணி நேரங்கள் முன்பு
அக்னிவீரர்களுக்கு 20% வேலை ஒதுக்கீடு: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக அறிவுரை
20 மணி நேரங்கள் முன்பு
வெளிநாட்டு நிதி தவறான பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய FCRA திருத்தம் லோக்சபாவில் நிறைவேற்றம்
20 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்