அயோத்தி ராமர் கோவிலில் 60 கிலோ வெள்ளி மாயமா? நன்கொடை விவகாரத்தில் தீவிர விசாரணை
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கிய காணிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கோவிலின் நன்கொடை மற்றும் சொத்து பதிவுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணையின் போது, ‘பிராண பிரதிஷ்டை’ நிகழ்ச்சிக்காக கோவில் அடித்தளத்தில் வைப்பதற்கென நகை வியாபாரிகள் 60 கிலோ வெள்ளிக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கோவிலின் கணக்கு மற்றும் இருப்பு பதிவுகளில் அந்த வெள்ளிக் கட்டிகள் குறித்த எந்த பதிவும் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த 60 கிலோ வெள்ளி கோவிலின் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து சிறப்பு புலனாய்வு குழு கடந்த சில நாட்களாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது.
மேலும், நன்கொடையாக வெள்ளிக் கட்டிகளை வழங்கியதாகவும், அதற்கான ரசீதுகளை அறக்கட்டளையிடமிருந்து பெற்றதாகவும் நகை வியாபாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனால், அயோத்தி ராமர் கோவில் நன்கொடை நிர்வாகம் தொடர்பான விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்