எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவில் 75வது ஆண்டு மகோத்சவ விழாவில் கலந்து கொண்டு பேசிய நரேந்திர மோடி, உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை பணிய வைக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: “தேச நலன் முதன்மையாக இருக்கும் வரை எந்த வெளிநாட்டு அழுத்தமும் இந்தியாவின் உறுதியை பாதிக்க முடியாது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான காலத்திலும் உலக அழுத்தங்களை இந்தியா வெற்றிகரமாக சமாளித்தது. அது தேசிய நலனில் நம் உறுதியை வெளிப்படுத்தியது” என்றார்.
இந்த விழா ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல; இந்தியாவின் அடுத்த 1000 ஆண்டுகளுக்கான ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது, 1951ல் சோம்நாத் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதும் இந்தியாவின் ஆன்மீக மறுமலர்ச்சியை உலகிற்கு காட்டியது என்றும் கூறினார்.
மேலும், இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் ஒன்றாக பயணிக்கின்றன என்று தெரிவித்தார். மே 11ம் தேதி இந்திய வரலாற்றில் முக்கியமான நாள் என்றும், 1998ல் இதே தேதியில் இந்தியா அணு ஆயுத சோதனையில் வெற்றி பெற்றது என்றும் அவர் நினைவூட்டினார்.
இந்த நிகழ்ச்சியின் போது சோம்நாத் கோவிலின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்பட்டது. குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
3 மணி நேரங்கள் முன்பு
பழனி நில மோசடி விவகாரத்தில் புதிய அதிர்ச்சி: ஆயக்குடி கோவில் நிலமும் முறைகேடாக பதிவு
3 மணி நேரங்கள் முன்பு
அண்ணாமலையின் புதிய திட்டம்: 'மிஸ்டு கால்' மூலம் உறுப்பினர் சேர்க்கை
3 மணி நேரங்கள் முன்பு
இந்தியா–சீனா எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: இரு நாடுகளும் முடிவு
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்