ஹிந்து கோவில்கள் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இருவர் கைது
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய நபருடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தது இந்திய உளவுத்துறைக்கு தெரியவந்தது.
இதையடுத்து, உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ஹபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் இருந்து சந்தேக நபர்களான இருவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், அவர்கள் அசீம் ரானா (பீப்லிஹ்டா பகுதி) மற்றும் ஆசாத் ராஜ்புத் (மீரட் மாவட்டம்) என அடையாளம் காணப்பட்டனர்.
இருவரும் 2025 டிசம்பர் மாதம் முதல் சாஜாத் பாட்டி என்ற ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய நபருடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்து, மேற்கு டெல்லி மெட்ரோ அருகிலுள்ள கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருப்பிட விவரங்களை பகிர்ந்துள்ளனர்.
மேலும், கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள பிஸ்ராக் கோவிலின் தகவல்களையும் அவர்கள் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த தகவல்கள் கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
எந்த சக்தியும் இந்தியாவை பணிய வைக்க முடியாது: சோம்நாத் விழாவில் பிரதமர் மோடி உறுதி
1 மணி நேரங்கள் முன்பு
முதல்வர் விஜய் ஸ்டாலின், வைகோவை நேரில் சந்திப்பு – அரசியல் மரியாதை சந்திப்பு கவனம் ஈர்ப்பு
1 மணி நேரங்கள் முன்பு
தமிழக சட்டசபை முதல் கூட்டம்: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு தொடக்கம்
1 மணி நேரங்கள் முன்பு
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்பு – கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைப்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்