உடனடி செய்தி

ஹிந்து கோவில்கள் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இருவர் கைது

ஹிந்து கோவில்கள் குறித்த தகவலை பாகிஸ்தானுக்கு பகிர்ந்த இருவர் கைது
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய நபருடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்தது இந்திய உளவுத்துறைக்கு தெரியவந்தது. இதையடுத்து, உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், ஹபூர் மாவட்டம் தவுலானா பகுதியில் இருந்து சந்தேக நபர்களான இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் அசீம் ரானா (பீப்லிஹ்டா பகுதி) மற்றும் ஆசாத் ராஜ்புத் (மீரட் மாவட்டம்) என அடையாளம் காணப்பட்டனர். இருவரும் 2025 டிசம்பர் மாதம் முதல் சாஜாத் பாட்டி என்ற ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய நபருடன் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பில் இருந்து, மேற்கு டெல்லி மெட்ரோ அருகிலுள்ள கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களின் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இருப்பிட விவரங்களை பகிர்ந்துள்ளனர். மேலும், கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள பிஸ்ராக் கோவிலின் தகவல்களையும் அவர்கள் அனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் கோவில்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித்திட்டமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக மாற்றம்: மாநிலங்களுக்கு பதிலாக 80 கோட்டங்கள் உருவாக்கம்
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக மாற்றம்: மாநிலங்களுக்கு பதிலாக 80 கோட்டங்கள் உருவாக்கம்
19 மணி நேரங்கள் முன்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் எச்சரிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு பாக் ராணுவ தளபதி அறிவிப்பு
பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் எச்சரிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு பாக் ராணுவ தளபதி அறிவிப்பு
19 மணி நேரங்கள் முன்பு
அர்ஜூன் சம்பத்: தமிழகத்தில் சிறுமிகள் பாதுகாப்பு குறைவு குறித்து குற்றச்சாட்டு
அர்ஜூன் சம்பத்: தமிழகத்தில் சிறுமிகள் பாதுகாப்பு குறைவு குறித்து குற்றச்சாட்டு
19 மணி நேரங்கள் முன்பு
டில்லி உயர்நீதிமன்றம்: ஈஷா குறித்த சர்ச்சை உள்ளடக்கங்களை நீக்க இடைக்கால உத்தரவு
டில்லி உயர்நீதிமன்றம்: ஈஷா குறித்த சர்ச்சை உள்ளடக்கங்களை நீக்க இடைக்கால உத்தரவு
19 மணி நேரங்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்