உடனடி செய்தி

இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க ரூ.36,441 கோடி: கேலோ இந்தியா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க ரூ.36,441 கோடி: கேலோ இந்தியா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவை உலக விளையாட்டு வல்லரசாக மாற்றும் நோக்கில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்காக ரூ.36,441 கோடி மதிப்பிலான மிகப்பெரிய விளையாட்டு மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2026-27 முதல் 2030-31 வரையிலான காலகட்டத்தில் விரிவுபடுத்தப்பட்ட கேலோ இந்தியா திட்டத்திற்கு ரூ.29,054 கோடியும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளின் வளர்ச்சிக்காக ரூ.7,387 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய விளையாட்டு வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய முதலீட்டு திட்டம் இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறமைகளை உலக தரத்திற்கு உயர்த்தி, இந்தியாவை விளையாட்டு வல்லரசாக உருவாக்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ், 'கேலோ இந்தியா பீடர் பள்ளிகள்' மற்றும் 'கேலோ இந்தியா உத்கிருஷ்டா வித்தியாலயா' என்ற இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. பள்ளி நிலையிலேயே திறமையான வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து, கல்வியுடன் இணைந்த தரமான விளையாட்டு பயிற்சி, சத்துணவு மற்றும் உதவித்தொகைகள் வழங்கப்படும். மேலும், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு நவீன உபகரணங்கள், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க நிதியுதவி மற்றும் வெளிப்படையான டிஜிட்டல் நிர்வாக முறை அறிமுகப்படுத்தப்படும். பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு முன்னுரிமையும் வழங்கப்படும். கிராமப்புறம் முதல் நகர்ப்புறம் வரை திறமைகளை கண்டறிய மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு, எதிர்கால ஒலிம்பிக் மற்றும் சர்வதேச பதக்கங்களை இலக்காகக் கொண்டு வீரர்களுக்கு நீண்டகால பயிற்சி வழங்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
காங்கிரஸ் வேட்பாளர் தேர்விலும் திமுக தலையீடு? துரை வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு
13 Sep 2026
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
விநாயகர் ஊர்வலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு தடை? ஹிந்து முன்னணி கடும் எதிர்ப்பு
13 Sep 2026
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
“விதிகளை பின்பற்றுபவர்களாக அல்ல; உருவாக்குபவர்களாக மாறுவோம்” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
13 Sep 2026
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
பிரிக்ஸ் அமைப்பை இந்தியா சிறப்பாக வழிநடத்தும்; இந்திய தலைமைத்துவத்தை பாராட்டிய ஈரான்
12 Sep 2026

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்