மேற்கு வங்க முதல்வர் உதவியாளர் கொலை: UPI தடயத்தில் 3 பேர் கைது
மேற்கு வங்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய முதல்வர் சுவேந்து அதிகாரி அவர்களின் தனிப்பட்ட உதவியாளர் சந்திரநாத் ராத் கொலை வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை தடயத்தின் அடிப்படையில் போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழல் பரபரப்பாக இருந்த நிலையில், சந்திரநாத் ராத் கடந்த 6ஆம் தேதி இரவு வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள மத்யம்கிராமில் தனது வீட்டிற்கு காரில் சென்றார். அப்போது மர்மநபர்கள் அவரை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தப்பினர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளிகள் பயணித்த கார் சுங்கச்சாவடியில் நின்றது கண்டறியப்பட்டது. அங்கு செலுத்தப்பட்ட கட்டணம் UPI மூலம் செய்யப்பட்டிருந்தது.
இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை தகவலை பயன்படுத்தி, போலீசார் குற்றவாளிகளின் அடையாளத்தை கண்டறிந்து, விஷால் ஸ்ரீவஸ்தவா, ராஜ் சிங், மயங்க் மிஸ்ரா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் கூலிப்படையினராக செயல்பட்டவர்கள் என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 13 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கொலம்பியாவில் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: 111 பேர் பலி; நாடு தழுவிய அவசரநிலை
8 மணி நேரங்கள் முன்பு
அம்பாசமுத்திரத்தில் மீண்டும் சுவாமி சிலைகள் சேதம்: உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
8 மணி நேரங்கள் முன்பு
பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும்: சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம்
8 மணி நேரங்கள் முன்பு
'ஆப்பரேஷன் முக்தா': பெங்களூருவில் 105 வங்கதேசத்தினர் சிக்கினர்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்