பார்லிமென்ட் போராட்டம் எதிரொலி: ராகுல் காந்தி உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு
பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் போராட்டத்தின் போது சனாதன தர்மத்தை அவமதித்ததாக கூறி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூன்று எம்.பி.க்கள் மீது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி (காசி) கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, பார்லிமென்ட் நுழைவுவாயில் அருகே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்தில், ராமர் கோவில் நிதி முறைகேடு குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் வகையில் தெருக்கூத்து பாணியில் நாடகம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ராகுல் காந்தி மற்றும் இந்தியா (INDIA) கூட்டணியைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் பங்கேற்றனர்.
அந்த நாடகத்தில் பூர்னியா தொகுதி சுயேட்சை எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்) கோவில் பூசாரி வேடத்தில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து, சில துறவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ராகுல் காந்தி, பப்பு யாதவ் மற்றும் சமாஜ்வாதி கட்சி எம்.பி. அவதேஷ் பிரசாத் ஆகியோர் மீது சனாதன தர்மத்தை அவமதித்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காசி துணை காவல் ஆணையர் கவுரவ் பன்சால் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தொகுதி மறுவரையறை மசோதா அடுத்த வாரம் பார்லிமென்டில்? மத்திய அரசு தீவிரம்
17 மணி நேரங்கள் முன்பு
சுதந்திரம் என்பது விருப்பம்போல் செயல்படுவது அல்ல: அஜித் தோவல் பேச்சு
17 மணி நேரங்கள் முன்பு
சென்னை ஐகோர்ட் உத்தரவு: தர்மபுரி கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற நடவடிக்கை
1 நாட்கள் முன்பு
தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் மாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அண்ணாமலை அழைப்பு
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்