பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் எச்சரிக்கை: ஆப்கானிஸ்தானுக்கு பாக் ராணுவ தளபதி அறிவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் மண்ணை பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிராக பயங்கரவாத செயல்பாடுகள் நடைபெறுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார்.
தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு வழங்குகிறது என்ற குற்றச்சாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து முன்வைத்து வருகிறது. இந்த நிலையில், ராவல்பிண்டியில் ஷியா மதகுருமார்களை சந்தித்த பின் பேசிய அசிம் முனீர், “கஜப் லில் ஹக்” என்ற பெயரில் தொடங்கப்பட்ட ராணுவ நடவடிக்கை மூலம் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிப்போம் என உறுதியளித்தார்.
மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் கட்டமைப்புகளை முற்றிலும் அழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சவுதி அரேபியா, துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் வேண்டுகோளின் பேரில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக காபூலில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 400 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்பு – கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைப்பு
1 நாட்கள் முன்பு
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை, மே 14க்கு ஆரஞ்சு அலெர்ட்
1 நாட்கள் முன்பு
அ.தி.மு.க. மீண்டும் பிளவா? பழனிசாமி – முன்னாள் அமைச்சர்கள் மோதல் தீவிரம்
1 நாட்கள் முன்பு
விஜய் மீது போர்ஜரி குற்றச்சாட்டு: ஆதரவு கடிதம் விவகாரத்தில் தினகரன் அதிரடி
2 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்