உடனடி செய்தி

தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் மாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அண்ணாமலை அழைப்பு

தமிழகத்தில் 50,197 நீர்நிலைகள் மாயம்: சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அண்ணாமலை அழைப்பு
தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் மீட்பு அவசியம் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கவலை தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 'வீ த லீடர்ஸ்' அமைப்பினருக்காக வெளியிட்ட வீடியோவில் பேசிய அவர், தமிழகத்தில் நகரமயமாக்கல் வேகமாக அதிகரித்து வருவதால் பசுமை பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதாக குறிப்பிட்டார். குறிப்பாக, சென்னையில் 67 சதவீத பரப்பளவு கட்டிடங்களாக மாறியுள்ள நிலையில், வெறும் 10 சதவீதம் மட்டுமே பசுமை நிலங்கள் இருப்பதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இருந்த 1.06 லட்சம் நீர்நிலைகளில் 50,197 நீர்நிலைகள் தற்போது காணாமல் போயுள்ளதாகவும், ஆறுகள் மாசடைந்து வருவதோடு காடுகளின் பரப்பளவும் குறைந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். தென் மாநிலங்களிலேயே அதிகளவில் நிலத்தடி நீரை பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும், தற்போதைய நிலை தொடர்ந்தால் 2050ஆம் ஆண்டுக்குள் கோவை மற்றும் கன்னியாகுமரியைத் தவிர பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாகும் எனவும் அவர் எச்சரித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகள் சீரமைத்தல் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று 'வீ த லீடர்ஸ்' அமைப்பினருக்கு அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை ஐகோர்ட் உத்தரவு: தர்மபுரி கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற நடவடிக்கை
சென்னை ஐகோர்ட் உத்தரவு: தர்மபுரி கோவில் சொத்து ஆக்கிரமிப்புகளை 12 வாரங்களில் அகற்ற நடவடிக்கை
52 நிமிடங்கள் முன்பு
இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க ரூ.36,441 கோடி: கேலோ இந்தியா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவை விளையாட்டு வல்லரசாக்க ரூ.36,441 கோடி: கேலோ இந்தியா திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 மணி நேரங்கள் முன்பு
வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கை: தப்பிக்க விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி
வினாத்தாள் கசிவு கும்பல்களுக்கு கடும் எச்சரிக்கை: தப்பிக்க விடமாட்டோம் என பிரதமர் மோடி உறுதி
1 நாட்கள் முன்பு
வறண்ட காவிரி: திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
வறண்ட காவிரி: திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
1 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்