வைபவ் சூறாவளியில் ராஜஸ்தான் அதிரடி வெற்றி; ஐதராபாத் வெளியேற்றம்
புதிய சண்டிகரில் நடைபெற்ற ஐ.பி.எல். எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 243 ரன்கள் குவித்து ஐதராபாத்துக்கு கடின இலக்கை நிர்ணயித்தது. தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் விளாசி ரசிகர்களை மிரள வைத்தார்.
அவரது அதிரடி ஆட்டத்துக்கு துணையாக துருவ் ஜுரெல் அரைசதம் அடித்தார். பதிலுக்கு விளையாடிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் கைப்பற்றி ஐதராபாத் அணியின் நம்பிக்கையை சிதைத்தார்.
19.2 ஓவர்களில் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டான ஐதராபாத் அணி தொடரில் இருந்து வெளியேறியது. ராஜஸ்தான் அணி அடுத்ததாக குஜராத்தை எதிர்கொண்டு பைனல் வாய்ப்புக்காக களமிறங்குகிறது.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்