உடனடி செய்தி

கடைசி ஓவரில் குஜராத் த்ரில் வெற்றி – பஞ்சாப் மீண்டும் சோகம்

கடைசி ஓவரில் குஜராத் த்ரில் வெற்றி – பஞ்சாப் மீண்டும் சோகம்
ஆமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி கடைசி ஓவரில் பரபரப்பான முறையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ஆரம்பத்திலேயே முகமது சிராஜ் அதிரடியாக பந்து வீசி பஞ்சாப் அணியின் டாப் ஆர்டரை சிதறடித்தார். 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்த பஞ்சாப் அணி கடும் நெருக்கடியில் சிக்கியது. அதன்பின் சூர்யான்ஷ் ஷெட்ஜ் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இணைந்து அணியை மீட்டனர். சூர்யான்ஷ் 24 பந்துகளில் அரைசதம் அடித்து 57 ரன்கள் எடுத்தார். ஸ்டாய்னிஸ் 40 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 163/9 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் சிறப்பான இன்னிங்ஸ் விளையாடி 57 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்டாய்னிஸ் வீசிய பந்தில் வாஷிங்டன் சுந்தர் சிக்சர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். குஜராத் அணி 19.5 ஓவரில் 167/6 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது

தொடர்புடைய செய்திகள்

செயின்ட் லூயிஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தல்
செயின்ட் லூயிஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தல்
6 மணி நேரங்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்தும் முதலிடம்
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்தும் முதலிடம்
1 நாட்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதலிடம்
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா அசத்தல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதலிடம்
2 நாட்கள் முன்பு
காமன்வெல்த் வெற்றிக்குப் பின் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு
காமன்வெல்த் வெற்றிக்குப் பின் நாடு திரும்பிய இந்திய வீரர்களுக்கு கோலாகல வரவேற்பு
3 நாட்கள் முன்பு

கருத்துகள்

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!

கருத்து சொல்லுங்கள்