செய்திகள்
⚡ உடனடி செய்தி
கிராமிய சினிமாவின் முகவரியான பாரதிராஜா காலமானார்
தமிழ் சினிமாவை புதிய பாதையில் கொண்டு சென்ற இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவால் காலமானார். 1941ஆம் ஆண்டு தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் பிறந்த அவர், '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தினார்.
கிராமத்து வாழ்க்கை, மனித உறவுகள் மற்றும் மண்ணின் மணத்தை இயல்பாக திரையில் பதிவு செய்த பாரதிராஜா, பல தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர். 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்பு ரோஜாக்கள்', 'முதல் மரியாதை', 'கருத்தம்மா', 'கிழக்கு சீமையிலே' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார்.
தேசிய விருதுகள், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல உயரிய விருதுகளை பெற்ற பாரதிராஜா, இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் வழிகாட்டியாகவும் தமிழ் திரையுலகில் அழியாத முத்திரை பதித்துள்ளார். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
100% உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவான விக்ரம்-1 வெற்றி
4 மணி நேரங்கள் முன்பு
தவெகவில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை? அதிமுக நிர்வாகிகளுக்கு கடம்பூர் ராஜூ எச்சரிக்கை
4 மணி நேரங்கள் முன்பு
பழநி கோவில் நில மோசடி: பல மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிரடி சோதனை; முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
5 மணி நேரங்கள் முன்பு
அரசு வழக்கறிஞர் நியமனம் குறித்து வழக்கு தொடர்ந்த த.வெ.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்
5 மணி நேரங்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்