எம்பாப்வே இரட்டை கோல்; ஈராக்கை 3-0 என வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரான்ஸ்
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘ஐ’ பிரிவு லீக் போட்டியில், பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியை வீழ்த்தி முக்கிய வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்வே இரண்டு கோல்கள் அடித்து அசத்தினார்.
பிலடெல்பியாவில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் எம்பாப்வே முதல் கோலை அடித்து பிரான்ஸை முன்னிலை பெறச் செய்தார். இதன்பின் திடீரென பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்ததால் போட்டி சுமார் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
ஆட்டம் மீண்டும் தொடங்கியதும், பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. 53வது நிமிடத்தில் எம்பாப்வே தனது இரண்டாவது கோலை அடித்து உலகக்கோப்பை அரங்கில் தனது கோல் எண்ணிக்கையை மேலும் உயர்த்தினார்.
இதையடுத்து, 65வது நிமிடத்தில் உஸ்மான் டெம்பேலே மேலும் ஒரு கோல் அடித்து பிரான்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஈராக் அணிக்கு சில வாய்ப்புகள் கிடைத்த போதிலும், பிரான்ஸ் அணியின் தற்காப்பு அரணை உடைத்து கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில், மழை மற்றும் இடி-மின்னல் தடைகளைத் தாண்டி, பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.
தொடர்புடைய செய்திகள்
செயின்ட் லுாயிஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா சாம்பியன்: ரூ.48 லட்சம் பரிசு
4 மணி நேரங்கள் முன்பு
கொரிய மாஸ்டர்ஸ் பாட்மின்டன்: காலிறுதிக்கு முன்னேறிய தான்வி சர்மா
1 நாட்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அசத்தல்
2 நாட்கள் முன்பு
செயின்ட் லூயிஸ் ரேபிட் செஸ்: பிரக்ஞானந்தா தொடர்ந்தும் முதலிடம்
3 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்