இந்திய ஜோடி பைனலில்: சாலஞ்சர் டென்னிஸில் அர்ஜுன்–ரித்விக் அதிரடி
மெக்சிகோவில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரில், இந்தியாவின் அர்ஜுன் மற்றும் ரித்விக் ஜோடி சிறப்பான ஆட்டத்தால் பைனலுக்கு முன்னேறியுள்ளது.
இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில், இந்திய ஜோடி அர்ஜென்டினாவின் பகுவாண்டோ மெனா மற்றும் மெக்சிகோவின் ரோட்ரிகோ மென்டஸ் ஜோடியை எதிர்கொண்டது. கடுமையாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் செட் டை-பிரேக்கர் வரை சென்றது. அதில் இந்திய ஜோடி 7-6 என வெற்றி பெற்றது.
அதேபோல் இரண்டாவது செட்டும் டை-பிரேக்கர் வரை நீண்டது. அதிலும் 7-6 என வெற்றி பெற்ற இந்திய ஜோடி, நேர்செட்டில் (7-6, 7-6) போட்டியை கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தது.
மொத்தம் 1 மணி 49 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய ஜோடியின் ஒற்றுமையும் தைரியமும் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
தொடர்புடைய செய்திகள்
இந்திய டென்னிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
1 நாட்கள் முன்பு
சசிகுமார் முகுந்த் அதிரடி வெற்றி: ஐ.டி.எப். டென்னிஸில் காலிறுதிக்கு முன்னேற்றம்
2 நாட்கள் முன்பு
நியூசிலாந்து 68 ரன் வித்தியாசத்தில் வெற்றி – தென் ஆப்ரிக்கா 107 ரன்னில் அவுட்
4 நாட்கள் முன்பு
பி.சி.சி.ஐ. நமன் விருது 2026: சிறந்த வீரராக சுப்மன் கில், சிறந்த வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு
6 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்