பேராவூரணி பேரூராட்சியில் ரூ.2 கோடி டெண்டர் முறைகேடு: சேர்மன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியில் டெண்டர் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் பேரூராட்சி தலைவர் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி (41) தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர். அவரது கணவர் சேகர் (45) பேரூர் கழக செயலராக உள்ளார். சாந்தியின் மாமனார் செல்வராஜ் (60) ஆகியோரின் பெயரில் பேரூராட்சி பணிகளுக்கான டெண்டர்கள் எடுத்து முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து தி.மு.க. பிரமுகரும் ஒப்பந்ததாரருமான செந்தில்குமார் 2025 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி நடைபெற்ற ஆய்வில் ரூ.2 கோடிக்கு மேல் முறைகேடு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நீலகண்டன் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்ததோடு பொதுநல வழக்கும் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் மார்ச் 11 ஆம் தேதி முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல், தலைவர் சாந்தி, சேகர், செல்வராஜ், முன்னாள் இளநிலை பொறியாளர் தாமஸ் ஆனந்த், தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் ஜமுனாராணி மற்றும் நீலகண்டன் உள்ளிட்ட ஏழு பேர் மீது 10 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ஹார்முஸ் ஜலசந்தி திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை 5% சரிவு
19 மணி நேரங்கள் முன்பு
ஏமன் கடற்கரை தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்பு
19 மணி நேரங்கள் முன்பு
உதயநிதி கைது; போலீஸ் விசாரணைக்கு பின் ஜாமினில் விடுதலை
19 மணி நேரங்கள் முன்பு
ஜூலையில் மும்மடங்கு மின் கட்டணம் ஏன்? குறைந்த மின்னழுத்தமும் முக்கிய காரணம் என தகவல்
1 நாட்கள் முன்பு
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்